தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறினால் பி.சீ.ஆர் அல்லது எண்டிஜென் பரிசோதனை!

213 0

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளி பேணாமை போன்ற சுகாதார விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதோடு இன்று முதல் பி.சீ.ஆர். மற்றும் ரெபிட் எண்டிஜென் பாிசோதனைகளுக்கும் உட்படுத்தப்படுவர்.

சுகாதார ஆலோசனைளுக்கமைய முகக்கவசம் அணியாமையும் கொரோனா பரவலுக்கான ஒரு காரணமாக அமையலாம் என்ற அடிப்படையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் பிரதி கால்துறை மா அதிபர் அஜித் ரோஹன தொிவித்துள்ளார்.

இக்குற்றச்சாட்டு தொடர்பில் நேற்றைய தினம் (04) 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் கடந்த அக்டோபர் 30ம் திகதி முதல் இதுவரை 2,172 பேர் மேற்படி சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் மேலும் தொிவித்துள்ளார்.