அரசஸ்தாபனங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் இராணுவம் ஈடுபடவில்லை- கமால் குணரட்ண

219 0

அரசஸ்தாபனங்களை இராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவில்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
வாகனச்சாரதிகள் அனுமதிப்பத்திரத்தை அச்சிடும் நடவடிக்கைகளை இராணுவம் மேற்கொள்வது ஒரு தற்காலிக நடவடிக்கை என தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண அமைச்சரவையின் அனுமதியுடனேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.


மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஏனைய நடவடிக்கைகளை திணைக்களமே முன்னெடுக்கின்றது அதி;ல் எந்த மாற்றமும இல்லை என தெரிவிததுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இராணுவம் அச்சிடும் நடவடிக்கைகளை மாத்திரம் முன்னெடுக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது அரசாங்கத்தின் நிரந்தரமான ஒரு முயற்சியில்லை என தெரிவித்துள்ள அவர் இராணுவத்திற்கு ஏனைய முக்கியமான பணிகள் உள்ளன நாங்கள் தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளிற்கு அவர்களை பயன்படுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார்.