அத்துரலிய ரத்தன தேரர் சத்தியபிரமாணம்

289 0
அத்துரலிய ரத்தன தேரர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று(05) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

காலை 10 மணிக்கு வருடத்தின் முதலாவது அமர்வு ஆரம்பமான நிலையில், 224 ஆவது எம்.பியாக  அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஓகஸ்ட் 5ஆம் திகதியன்று நடத்தப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலில், வெற்றியீட்டிய மற்றும் நியமன எம்.பிக்கள் அடங்கலாக 223 பேர், இதுவரையிலும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டிருந்தனர்.

எனினும், தங்களுடைய கட்சிகளுக்குக் கிடைத்த தேசிய பட்டியல் நியமனம் பூர்த்தி செய்யப்படாமையால், ஐக்கிய தேசிய கட்சியையும் எங்கள் மக்கள் சக்தி கட்சியையும் சேர்ந்த தேசிய பட்டியல் உறுப்பினர்கள் எவரும், சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவில்லை.

இந்தநிலையில், எங்கள் மக்கள் சக்தி கட்சியின் சார்பில், நீண்ட இழுபறிக்குப் பின்னர் அத்துரலிய ரத்தன தேரர் நியமிக்கப்பட்டு எம்.பியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சிக்குக் கிடைத்திருக்கும் தேசிய பட்டியல் நியமனம், இன்னுமே பூர்த்தி செய்யப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.