புலோலியைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று!! – எவ்வாறு தொற்றியது என்பது மர்மம்!

198 0

பருத்தித்துறை, புலோலியைச் சேர்ந்த ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் மந்திகை வைத்தியசாலையில் தலைவலி, இருமல், வாந்தி என்பவற்றுக்காகச் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார் என்றும், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவருக்குத் தொற்று ஏற்பட்ட வழி இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், அது தொடர்பாக ஆராயப்படுகின்றது என்றும் சுகாதாரப் பிரிவினரிடம் இருந்து அறிய முடிகின்றது.

இவர் 3 தினங்களுக்கு முன்னர் மருதனார்மடம் வந்திருந்தாக சுகாதாரப் பிரிவினரிடம் தெரிவித்துள்ளார். எனினும் அதனால் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று உறுதியாகக் கூற முடியாது என்று தெரிவிக்கப்படுகின்றது.