வேப்பங்குளத்தில் பல பகுதிகள் முடக்கம்!

238 0

விரைவான அன்ரிஜன் பரிசோதனையில் கர்பிணி பெண்ணொருவர், கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நிலையில் வவுனியா – வேப்பங்குளத்தின் சில பகுதிகள் பொலிஸாரால் முடக்கப்பட்டுள்ளன.

வவுனியா வேப்பங்குளம் முதலாம் ஒழுங்கையில் வசித்த கர்ப்பிணிபெண் ஒருவர், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு அன்ரிஜன் பரிசோதனை நேற்று (3) முன்னெடுக்கப்பட்டது. அதில் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.

இதனையடுத்து குறித்த பெண்ணின் இருப்பிடமான வேப்பங்குளம் முதலாம் ஒழுங்கை மற்றும் 2, 3, 4 மற்றும் 5ம் ஒழுங்கை பகுதிகள் பொலிஸாரால் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் பாதுகாப்பு கடைமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.