நேற்றைய தினம் 20 மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

225 0

நேற்றைய தினம் 20 மாவட்டங்களில் கொரோனா தொற் றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொவிட் -19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித் துள்ளது.

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் களாக அடையாளம் காணப்பட்ட 403 பேரில் 81 பேர் கொ ழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தேசிய செயற் பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 30 பேர், கண்டி மாவட்டத்தில் 56 பேர், களுத்துறை மாவட்டத்தில் 27 பேர் ஆகியோர் அடை யாளம் காணப்பட்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் 20 பேர், நுவரெலியா மாவட்டத்தில் 18 பேர், அம்பாறை மாவட்டத்தில் 17 பேர், கேகாலை மாவட்டத்தில் 17 பேர், குருணாகல் மாவட்டத் தில் 14 பேர் , இரத்தினபுரி மாவட்டத்தில் 14 பேர் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 06 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

 

காலி மாவட்டத்தில் 04 பேர் , யாழ்ப்பாண மாவட்டத்தில் 04 பேர், மாத்தளை மாவட்டத்தில் 02 பேர்  மற்றும் மாத்தறை மாவட்டத்தில் 03 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

புத்தளம், அம்பாந்தோட்டை, மொனராகலை, அனுராத புரம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப் பட்டுள்ளனர் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரி வித்துள்ளது.