போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த இருவர் கைது

195 0

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்திய முச்சக்கர வண்டிகள் இரண்டும், ஹெரோயின் போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

போதையற்ற நாட்டினை உருவாக்கும் செயறிட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.எஸ்.மெண்டிஸின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினால் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்றத்தடுப்பு விசாரணைப்பிரின் பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டாரவின் தலைமையிலான குழுவினர் இது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.