வவுனியாவில் ஜெனிவா விஷயங்களை கையாள்வதற்கான ஆலோசனைக் குழுவின் கூட்டம் ஆரம்பம்!

245 0

ஜெனிவா விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான ஆலோசனை குழு ஒன்று அண்மையில் கிளிநொச்சியில் உருவாக்கப்பட்டிருந்தது.

அந்த ஆலோசனைக்குழு இன்று பிற்பகல் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் கலந்துரையாடல் ஒன்றைமுன்னெடுத்துள்ளது.

குறித்த கலந்துரையாடலில் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டுள்ள நிலையில் ஜெனிவா கூட்டத்தொடரில் முன்வைக்க வேண்டிய விடயங்கள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பாக ஆராயப்பட்டிருந்தது.

இதில் தமிழ்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் எஸ்.சிவகரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் கயேந்தி்குமார் பொன்னம்பலம், செ.கயேந்திரன் , முன்னாள் மாகாண உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மதகுருமார்கள், பொது அமைப்புகள் கலந்து கொண்டுள்ளனர்.