கொடதெனியாய பகுதியில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் ஒன்றில் இந்திய நாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், இரண்டு இந்தியர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் அமைந்துள்ள இரும்பு தொழிற்சாலை ஒன்றின் கொதிகலன் ஒன்று வெடித்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.