தரம் ஒன்றில் மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வு அடுத்த மாதம்

213 0

மேல் மாகாணம் மற்றும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் தவிர ஏனைய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்கு தரம் ஒன்றில் மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வு அடுத்த மாதம் நடத்துவதற்கு திட்டமிட்டிருப்பதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அவர் கூறினார்.