ஜீப் சாரதிகள் தனிமைப்படுத்தலில்

244 0

நாட்டுக்கு வருகைதந்துள்ள உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகளை, யால தேசிய சரணாலயத்துக்கு அழைத்து சென்ற ஜீப் சாரதிகள் 14 நாட்கள் வரை  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

113 சுற்றுலாப் பயணிகளுடன் யால சென்றிருந்த 28 சாரதிகளே, இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேற்படி சுற்றுலாப் பயணிகள் சுகாதார வழிமுறைகளுக்கமைய முகக்கவசம் அணியாதிருந்தமை பலரின் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதன் காரணமாக, சாரதிகளை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.