சிறிலங்காவில் மேலும் 191 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 502 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 40,628 ஆக அதிகரித்துள்ளது.