கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவித்த மேலும் 251 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இன்று காலை 8.30 அளவில் நிறைவடைந்துள்ள 24 மணிநேர காலப்பகுதிக்குள் பல்வேறு நாடுகளில் இருந்து 11 விசேட விமானங்கள் ஊடாக குறித்த இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
அத்துடன் கட்டார் டோஹா நகரில் இருந்து 103 பேரும் அபுதாபியில் இருந்து 47 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை குறித்த காலப்பகுதியில் சுமார் 387 இலங்கையர்கள் பல்வேறு தேவைகளின் நிமித்தம் வெளிநாடுகளுக்கு பயணித்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய கடமைநேர பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இதில் சுமார் 158 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் ஜப்பான் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்கு பயணித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.