கடந்த 24 மணித்தியாலங்களில் விபத்துக்களால் 12 பேர் பலி

232 0

கடந்த 24 மணித்தியாலங்களில் ஏற்பட்ட வாகன விபத்துக்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் காயமடைந்திருப்பதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தொிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவது தொடர்பாக வழங்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றத் தவறியதே இந்த விபத்துகளுக்கு காரணம் என்று அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.