கிழக்கு மாகாணத்தில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு

235 0
கிழக்கு மாகாணத்தில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கல்முனை கிராம சேவகர் பிரிவின் சில பகுதிகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் கல்முனை 1, 1C, 1E, 2, 2A, 2B, 3 மற்றும் 3A பகுதிகளும் கல்முனை குடி 1, 2 மற்றும் 3 பகுதிகளும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.