புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்

238 0

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கான புதிய வரையறைகளை நிரணயித்து வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று ராஜகிரியவில் உள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்றது

இதன் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் சட்டத்தரணி நிமல் புன்சிஹேவா தெரிவித்தார்.

அதேநேரம் அடுத்த ஆண்டு மாகாண சபைகளுக்கான தேர்தல் ஒன்று நடைபெறுமாக இருந்தால் அதற்காக 4 ஆயிரம் மில்லியன் ரூபாய்கள் நிதி ஒதுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்

இன்று நடைபெற்ற கூட்டத்தின் போது எதிர்வரும் ஜனவரி 11 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கும் அதேதினத்தில் மாலை வேளையில் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுடன் கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்