7 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் மீட்பு..!

199 0

காலி மீன்பிடி துறைமுகத்திற்கு அருகாமையில் உள்ள ஜாகொட்டுவ கடற்கரை பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட படகிலிருந்து 7 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த படகில் 5 பேர் பயணித்துள்ள நிலையில், சுற்றிவளைப்பு இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் கைதுசெய்யப்பட்ட 4 பேரில் 2 பேர் மாத்தறை பிரதேசத்தையும், ஏனைய இருவரும் பானம மற்றும் நீர்கொழும்பு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என கடற்படைப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

குறித்த படகிலிருந்து, 7 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய 5.9 கிலோகிராம் ஐஸ் மற்றும் 1.9 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்