சிறிலங்காவில் கொரோனா பாதிப்பு 43ஆயிரத்தைக் கடந்தது!

224 0

சிறிலங்காவில் மேலும் 421 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 43 ஆயிரத்து 123ஆ உயர்ந்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 706 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை35 ஆயிரத்து329 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இன்னும் ஏழாயிரத்து 595 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 199 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.