இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் களாக அடையாளம் காணப்பட்ட 639 பேரில் 133 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் கொவிட் – 19 இரண் டாவது அலையில் கொரோனா தொற்றாளர்களின் எண் ணிக்கை 18 ஆயிரத்து 110 ஆக அதிகரித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் 190 பேர் நேற்றைய தினம் தொற் றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளனர்.
அதில் அவிசா வெல்ல ஆடைதொழிற்சாலையில் 83 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் 89 பேர், களுத்துறை மாவட்டத்தில் 50 பேர், அம்பாறை மாவட்டத்தில் 42 பேர், இரத்தின புரி மாவட் டத்தில் 27 பேர் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 21 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கேகாலை மாவட்டத்தில் 19 பேர், குருணாகல் மாவட்டத் தில் 18 பேர், காலி மாவட்டத்தில் 10 பேர், மாத்தறை மாவட் டத்தில் 09 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தில் 08 பேர் மற்றும் மாத்தளை மாவட்டத்தில் 05 பேர் அடையாளம் காணப் பட்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் 04 பேர், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 03 பேர், புத்தளம் மாவட்டத்தில் 02 பேர், மொ னராகலை மாவட்டத்தில் 02 பேர் , பதுளை மாவட்டத்தில் 02 பேர் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங் களில் தலா ஒருவர் என்ற அடிப் படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 03 பேரும் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்களில் அடங்குவதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரி வித்துள்ளது.