450 கைதிகளின் தண்டனையைக் குறைக்க ஜனாதிபதியிடம் பெயர் பட்டியல் சமர்ப்பிப்பு

189 0

சிறைக்கைதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைகளைக் குறைக்கும் திட்டத்தின் கீழ், சுமார் 450 கைதிகளின் பெயர் பட்டியல் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ளதாக சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.

 

இந்த நிலையில், இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றவுடன், உடனடியாக கைதிகளுக்கான தண்டனைகள் குறைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படவுள்ளது.

மேலும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு அந்தத் தண்டனை 20 வருடங்கள் வரை குறைக்கப்படவுள்ளதாகவும் இதற்கு முன்னர், கைதிகளுக்கான தண்டனை குறைக்கும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டபோதிலும் 22 வருடங்களுக்கு முன்னர் அது கைவிடப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே சுட்டிக்காட்டியுள்ளார்.