கொள்ளுபிட்டியில் கட்டடம் ஒன்றின் கீழ்தளம் நீரில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழப்பு

254 0

கொழும்பு – கொள்ளுபிட்டியில் கட்டடம் ஒன்றின் கீழ்தளம் நீரில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு பெய்த மழையினால் கொள்ளுப்பிட்டி – டுப்ளிகேஷன் வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றின் கீழ்தளமே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளது.

குறித்த கட்டட நிர்மாணப்பணியில் ஈடுபடுகின்ற ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் குறித்த கட்டடத்தின் கீழ்தளத்தில் மேலும் 5 பேர் சிக்கி இருந்த நிலையில் அவர்கள் இன்று காலை பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.