மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுபவர்ளை அடையாளம் காண்பதற்காக வெளியேறும் இடங்களில் எழுமாறாக மேற்கொள்ளப்படும் அன்டிஜன் பரிசோதனைகளில் மேலும் 13 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, குறித்த பரிசோதனை மூலம் இதுவரை 74 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 18ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தைவிட்டு வெளியேறுபவர்ளை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளின் எண்ணிக்கை 10986 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இந்த அன்டிஜன் சோதனைகள் ஜனவரி 5ஆம் திகதி வரை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.