PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 12 இலட்சத்தை தாண்டியது

203 0

நேற்றைய (28) தினம் வரைக்கும் நாட்டினுள் மேற்கொள்ளப்பட்டுள்ள பி.சி. ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 12 லட்சத்தையும் தாண்டியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வருடம் பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளுக்காக அரசாங்கம் ரூபாய் 720 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை செலவிட்டுள்ளது.

இந்த 12 இலட்ச பிசிஆர் பரிசோதனைகளுள் 41,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து அடையாளம் காணப்பட்டவர்களாவர்.