‘முதலமைச்சர் நாற்காலி மேல் ஆசைப்படுபவன் நான் அல்ல’ – முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

239 0

முதலமைச்சர் நாற்காலி மேல் ஆசைப்படுபவன் நான் அல்ல என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் போதும் பல்வேறு அரசியல் கட்சிகளும் பிரசாரத்தை தற்போதே தொடங்கிவிட்டன. இதனால், தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது.

அந்த வகையில், அதிமுக  முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 19-ந்தேதி, தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து, பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு முதற்கட்ட பயணத்தை நிறைவு செய்தார்.

இந்நிலையில், நாமக்கல்லில் இன்று 2-வது கட்டமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அம்மாவட்டத்தின் முதலைப்பட்டி பகுதியில் வீடு வீடாக சென்று முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.

பின்னர் அங்கு பிரசார கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, ‘முதலமைச்சர் நாற்காலி மேல் ஆசைப்படுபவன் நான் அல்ல’ என தெரிவித்தார்.