குரோஷியாவின் மத்திய பகுதியில் சக்தி வாய்ந்த பூகம்பம்!

240 0

குரோஷியா நாட்டின் மத்திய பகுதியில் நேற்றைய தினம் ஏற்பட்ட  பூகம்பத்தில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.

தலைநகர் ஜாக்ரேப்புக்கு தென்கிழக்கேயுள்ள பகுதியை மையமாக கொண்ட குறித்த பூகம்பம்  ரிச்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது.

 

தலைநகர் வரை உணரப்பட்ட இப் பூகம்பத்தால் அப்பகுதியிலுள்ள கட்டிடங்கள், வீடுகள் பலமாக குலுங்கின. ஏராளமான வீடுகளின் கூரைகள் பெயர்ந்து விழுந்ததோடு, சுவர்களிலும் விரிசல்கள் ஏற்பட்டன.

அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவோ அல்லது காயமடையவோ இல்லையென செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த மார்ச் மாதம் நேரிட்ட  பூகம்பத்தினால் ஒருவர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.