தொல்பொருள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட பேராசிரியர் அநுர மனதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திசாநாயக்க ஓய்வுபெறவுள்ளதால், அப்பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
களனிப் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆய்வுப்பிரிவின் சிரேஷ்ட பேராசிரியராக கடமையாற்றிய இவர் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி பதவி ஏற்கவுள்ளார்.