எட்கா குறித்து பேச்சு நடத்த இலங்கை – இந்தியா இணக்கம்

449 0

Fotor0507213018எட்கா எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை குறித்து உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்த இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் இணங்கியுள்ளன.

அத்துடன் இந்த பேச்சுவார்த்தைகளை இந்த வருட இறுதிக்குள் நிறைவு செய்யவும் இணங்கப்பட்டுள்ளது.

இந்திய வர்த்தக அமைச்சின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச வர்த்தகதுறை அமைச்சர் மலிக் சமரவிக்ரம, வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜையும், வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனையும் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment