கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் ஆயிரத்து 58 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.
இதனையடுத்து, கல்முனை சுகாதார பிராந்திய சுகாதார திணைக்களத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஆறு கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், காத்தான்குடி பகுதியில் நேற்று 13 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் மூன்று தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 12 மணித்தியாலங்களுக்குள் கிழக்கு மாகாணத்தில் 48 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிலையில், கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் ஆயிரத்து 58 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.