மைத்திரி தலைமையில் நாளை கூடுகிறது சுதந்திரக் கட்சியின் மத்தியக்குழு கூட்டம்

187 0

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்தியக்குழு கூட்டம் நாளை (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது.

கட்சியின் உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், தற்போதைய அரசியல் நிலைமை குறித்து இதன்போது ஆராயப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை கட்சி மறுசீரமைப்பு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.