சிறிலங்காவில் மேலும் 462 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

224 0

சிறிலங்காவில்  மேலும் 462 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 40 ஆயிரத்து 842ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 650 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 32 ஆயிரத்து 701 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இன்னும் ஏழாயிரத்து 954 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 187 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.