கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர் மாயம்

212 0

காணாமல்போயுள்ள கொரோனா வைரஸ் நோயாளி ஒருவரை கண்டுபிடிப்பதற்காக பொதுமக்களின் உதவியை நாஎடியுள்ள பொலிஸார் அவரின் படத்தை வெளியிட்டுள்ளனர்.

சபுஸ்கந்தையை சேர்ந்த 22 வயது கொரோனா நோயாளியொருவர் காணாமல்போயுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிமேஸ்மதுசாங்க என்பவர் போதைப்பொருளிற்கு அடிமையானவர் சமீபத்திலேயே மஹர சிறையிலிருந்து விடுதலையானவர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவரை பிசிஆர் சோதனை முடிவுகள் வெளியாகும் வீட்டில் சுயதனிமைப்படுத்தலை முன்னெடுக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர் என பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று வெளியான சோதனை முடிவுகள் அவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளன அதேவேளை அவர் காணாமல்போயுள்ளா என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட நபர் குறித்த தகவல் தெரிந்தால் உடனடியாக பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு பொலிஸ் பேச்சாளர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.