பஸ்ஸில் சென்று கொண்டிருந்தவருக்குக் கொரோனா

210 0

கடுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் வெளியேறும் பகுதியில் இன்று (26) பகல் 2 – 3 மணிவரையில் 50 ரெபிட் ஆண்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் இன்று மாலை 4 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் புதிதாக 105 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். மொத்தமாக இதுவரையில் 7,267 பேருக்கு கம்பஹாவில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.