வருடாந்திர பொலிஸ் இடமாற்றம் ஒத்திவைப்பு

202 0

கொவிட் தொற்றுநோய் காரணமாக வருடாந்திர பொலிஸ் இடமாற்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக  பிரதிப் பொலிஸ்மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஜனவரி 15ஆம் திகதி திட்டமிடப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் வருடாந்திர இடமாற்றம் கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக மார்ச் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ்மா அதிபரின் உத்தரவைத் தொடர்ந்தே இடமாற்றங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.