சஜித்துடன் இணைந்த முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்!

212 0

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சமூக ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட சட்டத்தரணி ரொஹான் பல்லேவத்த ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து தனது எதிர்கால அரசியல் பயணத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சட்டத்தரணி ரொஹான் பல்லேவத்த ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் வெளியுறவு வர்த்தகக் கொள்கை ஆகியவற்றுக்கான திட்டமிடல் குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் தலைவராகவும், பிரதான ஆலோசகராகவும் சட்டத்தரணி ரொஹான் பல்லேவத்த நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.