கொவிட்-19 கொரோனா தொற்று காரணமாக வெளி நாடுகளில் சிக்கியுள்ள 64 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர்.
அதன்படி, மாலைதீவிலிருந்து 13 பேர் மற்றும் கட்டாரி லிருந்து 51 பேர் ஆகிய நாடுகளிலிருந்து கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்ததாகத் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப் பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.