பராக்கிரமபாகு சமுத்திரத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு

203 0

பொலன்னறுவை மாவட்டத்தில் அதிக மழைகாரணமாக பராக்கிரமபாகு சமுத்திரத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வான் கதவு ஒரு வினாடிக்கு 280 கன அடி நீரை வெளியேற்றும் என்று பொலன்னறுவை நீர்ப்பாசன அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

தற்போது நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 10,000 ஏக்கருக்கு அருகில் உள்ளது என்று பொலன்னறுவை நீர்ப்பாசன அலுவலகம் தெரிவித்துள்ளது.