வெல்லம்பிட்டி லக்சந்த செவன தொடர்மாடி குடியிருப்பு தனிமைப்படுத்தலி லிருந்து விடுவிப்பு

200 0

வெல்லம்பிட்டி லக்சந்த செவன தொடர் மாடி குடியிருப்பு தனிமைப்படுத்தலிலிருந்து இன்று காலை விடு விக்கப்பட்டதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்டிருந்த வெல்லம்பிடிய பிரதேசத் தில் அமைந்துள்ள ´லக்சந்த செவன´ தொடர் மாடி குடியிருப்பு இன்று காலை 6 மணி முதல் தனிமைப் படுத்தலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை, திருகோணமலை அஹயபுர கிராம உத்தியோகஸ்தர் பிரிவு மற்றும் திருநகர் பிரதேசங்கள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிர தேசங்களாக அறிவிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.