அங்கொட பகுதியில் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்பு

248 0

அங்கொட பகுதியில் உள்ள காணியொன்றில் புதைக்கப்பட்டிருந்த ஒரு தொகை ஆயுதங்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்டு பிடித்தனர்.

இதன்போது அங்கிருந்து துருக்கி நாட்டை சேர்ந்த நவீன ரக துப்பாக்கிகள் இரண்டு, ஜேர்மன் நாட்டை சேர்ந்த இரண்டு மெகசின்கள் மற்றும் 14 தோட்டாக்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த காணி அண்மையில் இந்தியாவில் உயிரிழந்த பாதாள உலகத் தலைவனான அங்கொட லொக்காவுக்கு சொந்தமானது என தொிவிக்கப்படுகின்றது.