தனியார் துறை ஊழியர்களுக்காக முக்கிய அறிவித்தல்

227 0
தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 ஆக அதிகரிக்க தேவையான சட்டதிட்டங்களை அறிமுகப்படுத்த தொழிலாளர் ஆணையாளர் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தொழில் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் எதிர்வரும் வாரத்தில் உரிமையாளர்கள் மற்றும் தொழிற் சங்க தலைவர்கள் இணைந்து இந்த விடயம் தொடர்பில் முடிவுக்கு வர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.