ஐ.நா. வதிவிட இணைப்பாளருடன் சுமந்திரன் இன்று சந்திப்பு – ஜெனீவா குறித்து ஆராய்வர்

257 0

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கர், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரிட்டன் தூதுவர் சரா ஹல்டன் ஆகியோரை இன்று புதன்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சந்திக்கிறார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர், இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல், தமிழ்த் தரப்பின் நிலைப்பாடுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்படலாம் என்று தெரியவருகின்றது.

இந்தச் சந்திப்புக்கள் தொடர்பாக சுமந்தின் தெரிவிக்கையில், “அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பை அடுத்து பிரிட்டன் தூதுவரும், ஐ.நா.வதிவிட இணைப்பாளரும் நேரில் சந்தித்து கலந்துரையாடுவதற்கான அழைப்புக்களை விடுத்துள்ளனர். ஜெனிவா மனித உரிமைகள் பேரவை, உட்பட அனைத்து விடயங்களிலும் எமது நிலைப்பாட்டைத் திடமாக கூறுவோம்” என்றார்.