கேகாலை மருத்துவரின் மருந்திற்கு ஆயுர்வேத திணைக்களம் அனுமதி

189 0

கேகாலை மருத்துவர் தம்மிகபண்டார உருவாக்கியுள்ள ஆயுர்வேதமருந்திற்கு ஆயுர்வேத திணைக்களத்தின் மருந்தியல் பிரிவு அனுமதி வழங்கியுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.

உணவு என்ற பிரிவின் கீழ் ஆயுர்வேத மருந்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அவர் இதன்காரணமாக அதனை விநியோகிப்பதை தடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறிப்பிட்ட மருந்து குறித்து சுகாதார திணைக்களத்தின் குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.