மஹிந்த அமரவீரவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

315 0

mahinda-amaraweera1கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவை எதிர்வரும் ஜனவரி 17 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் சட்ட விரோத மீன்பிடி உபகரணங்களைத் தடை செய்யுமாறு கண்டக்குழி மீனவர்கள் எட்டுப் பேர் முன்வைத்த ரீட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அமைச்சருக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.