பண்டிகைக் காலத்தில் மதுபானக் கடைகளை மூடவும்

185 0

இந்தப் பண்டிகைக் காலத்தில் அனைத்து மதுபானக் கடைகளையும் மூடுவதற்கு ஜனாதிபதியும்  ஏனைய தொடர்புடைய அதிகாரிகளும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஆசிரியர் மருத்துவர் ஹரித அளுத்கே தெரிவித்தார்.

 

‘சமூகத்தின் சிறந்த நன்மைக்காக’ இவ்வேண்டுகோளை விடுப்பதாக அவர் கூறினார்.
மரு அருந்துதல் தற்போதைய தொற்று பரவல் நிலையில் ஒரு தனி நபரின் நோய் எதிர்ப்பு சக்தியின் மீது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.

இந்தக் கோரிக்கைக்கான மற்றொரு காரணம் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணுதல் போன்ற கொவிட்-19 விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது சாத்தியமில்லாமலும் போகலாம். இது வைரஸ் பரவுதலுக்கான அபாயத்தை அதிகரிக்கும் என்பதாலாகும் என மருத்துவர் அளுத்கே மேலும் கூறினார்.

இத்தகைய காரணங்களுக்காகவே இந்தப் பண்டிகைக் காலங்களில் தனிநபர் ஒன்றுகூடுவது குறைக்கப்படும் என்ற நம்பிக்கையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேற்படி கோரிக்கையை விடுக்கிறது என்றார்.