பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை பதிவு செய்வதற்கான திகதியை நாளை வரை நீடித்துள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. .
ஒன்லைன் முறையில் மாத்திரம் பதிவு செய்யக் கடந்த மாதம் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
அது தொடர்பான அறிவித்தலைப் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
கடந்த 2019 – 2020 புதிய கல்வியாண்டில் சுமார் 41ஆயிரத்து 500 மாணவர்களை பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.