பல இடங்களில் பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்படுவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டி உள்ளார்.
காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் ஒழிய வேண்டும்.
* நேர்மையான கொள்கைகளை முன் வைத்து மக்கள் நீதி மய்யம் பிரசாரத்தில் ஈடுபடும்.
* வரும் முன் கணிப்பு என்ற முறையில் அரசை செயல்படுத்துவோம்.
* பல இடங்களில் பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.