அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளருக்கு கொரோனா

235 0

நுவரெலியா- தலவாக்கலை, அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேச சபையின் தவிசாளருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையின் முடிவுகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கிடைக்கப்பெற்ற நிலையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக லிந்துலை சுகாதார மருத்துவ அதிகாரி ஜனத் அபேகுனரத்ன தெரிவித்துள்ளதாவது, “அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளரை கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மக்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதில் அதிக அக்கறை செலுத்துங்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.