கம்பஹா வைத்தியசாலையில் கொரோனா தீவிர சிகிச்சை பிரிவொன்றை நிறுவ நடவடிக்கை

212 0

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில், தீவிர சிகிச்சை பிரிவை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பிரிவு உலக வங்கியின் உதவியுடன் சுமார் 22 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படும் என  வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சமன் பத்திரன தெரிவித்துள்ளார்.

இலங்கை விமானப்படையின் 70வது ஆண்டுவிழாவை முன்னிட்டு சமூக சேவையாக இலங்கை விமானப்படையின் 45 உறுப்பினர்களின் உழைப்புடன் இந்த தீவிர சிகிச்சை பிரிவின் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த பிரிவின் கட்டுமான பணிகள், இரண்டு வாரங்களில் நிறைவு செய்து, எதிர்வரும் ஜனவரி 1ஆம் திகதி திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் சமன் பத்திரன குறிப்பிட்டுள்ளார்.