பேருந்துகளில் சிவில் உடையில் 400 பொலிஸ் அதிகாரிகள்!

235 0

பேருந்துகளை பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக 400 பொலிஸ் அதிகாரிகள் சிவில் உடையில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பேருந்துகளின் தனிமைப்படுத்தல் சட்டம் கடைப்பிடிக்கப்படுகின்றதா? என்பது தொடர்பிலும் சாரதிகளின் நடத்தை தொடர்பிலும் ஆராய இந்த அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.