ஆரம்பப் பிரிவிற்கான கல்வி நட வடிக்கைக்கள் எப்போது?

210 0

ஆரம்பப் பிரிவிற்கான கல்வி நட வடிக்கைக்காக பாடசாலைகள் எதிர் வரும் ஜனவரி 11ஆம் திகதி திங் கட் கிழமை முதல் மீண்டும் திறக்கப்படவிருப்பதாகக் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி, மேல் மாகாணம் மற்றும் தனிமைப் படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் உள்ள பாட சாலைகளில் தரம் 1 முதல் 5 வரையான ஆரம்பப் பிரிவுகள் எதிர்வரும் ஜனவரி 11ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படவிருப்பதாகக் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.