கிளிநொச்சியில் சமத்துவக் கட்சி இளைஞர் அணியின் இரத்ததானம்

197 0

சமத்துவக் கட்சியின் இளைஞர் அணியினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கட்சியின் கிளிநொச்சி தலைமை அலுவலகத்தில் இரத்த தானம் வழங்கியுள்ளனர்.

 கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்ட பற்றாக்குறையைத் தொடர்ந்து அவர்களின் கோகரிக்கைக்கு அமைவாக சுமார் 50
வரையான இளைஞர்கள் குருதிக் கொடையளித்துள்ளனர்.


கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அண்மைக் காலமாக குருதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலைமையைத் தொடர்ந்து அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக சமத்துவக் கட்சி இளைஞர் அணி உதிரத்தால் ஒன்றிணைவோம், நீயும் உயிர் கொடுக்கலாம், ஒரு துளி உதிரத்தைக் கொடு எனும் தலைப்பில் இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து குருதிக் கொடையளித்துள்ளனர்.

தொடர்ந்து இச்செயற்பாட்டை வருடந்தோறும் மேற்கொள்வதற்கும் சமத்துவக்
கட்சியின் இளைஞர் அணியினர் தீர்மானித்துள்ளனர்.